ஆரம்பித்துவிட்டது.
கோடைக்காலத்து
சூரியன்
கொடுமையால்
நிலம்
சூடடைவது
போல் நம்
உடலும்
வெப்பத்திற்கு
ஏற்ப மாறுதல்
அடையும். இந்த
மாறுதல்கள்
நிகழும்போது
ஒரு சில
நோய்கள்
நம்மை தாக்கக்கூடும்.
அதில்
முதன்மையாக
தெய்வக்
குத்தமா?
அம்மை
நோய் வந்தால்
அது தெய்வக்
குத்தம் என்றே
இன்றைக்கும்
கிராமப்
புறங்களில்
நம்பிக்கொண்டு
இருக்கிறார்கள்.
அதுவும் ‘அம்மனின்’ கோபப்பார்வை
என்றே
கூறுகிறார்கள்.
ஆனால் இது
முழுக்க
முழுக்க
தட்பவெப்ப
நிலை
மாறுபாட்டைப்
பொறுத்தது.
அம்மைநோய்
கண்ட
காலத்தில்
சுத்தமாக இருந்தால்
நோய்
விரைவில்
குணமாகும்
என்பதாலும்,
மற்றவர்களுக்குப்
பரவாமல்
இருக்கவேண்டும்
என்பதற்காகவும், நம்
முன்னோர்கள்
சில
கட்டுப்பாடுகளை
விதித்து அதை
தெய்வத்தின்மேல்
ஏற்றி
கடைப்பிடித்து
வந்தார்கள்.
ஆனால்
தற்காலத்தில்,
இது வைரஸ்
கிருமியால்
உண்டாகிறது
என்பது
அனைவரும் அறிந்ததே.மேலும்
இதனைப் பற்றி
சிலஅறியாத
தகவல்களைத்
தெரிந்துகொள்வோம்.
சித்த
மருத்துவத்தில்
இந்நோயை
வைசூரி என்று
குறிப்பிடுகின்றனர்.
முன்பு
பெரியம்மையை
வைசூரி என்றே
அழைத்தனர்.
அது உயிர்க்
கொல்லி
நோயாக
இருந்தது. {ஆகவேதான்
[காலரா,பிளேக்
போன்றே]
இந்நோயும்
கொள்ளை
நோய் என்றே
கூறப்பட்டது .}
தற்போது
இது
முற்றிலும்
ஒழிக்கப்பட்டு
விட்டது.
மற்ற பிற
அம்மை
நோய்கள்
தற்போதும்
குழந்தைகள்
முதல்
பெரியவர்கள்
வரை நிறைய
பாதிப்புகளை
உண்டாக்குகின்றன.
அவற்றில் சில
1. சின்னம்மை
(Chikenpox) {சிக்கன்
பாக்ஸ்
(கொப்புளங்களாக
வரும் }
2. தட்டம்மை
(Measles) {மணல்வாரி
அம்மை
என்றழைக்கப்படும்}
3. புட்டாலம்மை
(mumps) {பொன்னுக்கு
வீங்கி
என்றழைக்கப்படும்}
4. உமியம்மை
{Rubella}
சின்னம்மை:
சின்னம்மை
மிகவும்
எளிதில் தொற்றும்
பண்புடைய
நோயாகும்.
குறிப்பாக 12
வயதுக்கு
உட்பட்ட
குழந்தைகளுக்கு
இந்நோய்
எளிதில்
ஏற்படும் Varicella
zoster-virus என்ற
வைரஸ் கிருமி
மூலம்
இந்நோய்
ஏற்படுகிறது.
சின்னம்மை
தானாகவே
குணமாகும்
அல்லது தக்க மருந்துகளை
பயன்படுத்தி
குணப்படுத்த
லாம். அம்மை
நோயின்
தாக்கம்
அதிகமாக
இருக்கும்
போது
சிலருக்கு
நிமோனியா
அல்லது
மூளைக்காய்ச்சல்
ஏற்படும்
அபாயம்
உள்ளது. கரு
தரித்த
பெண்களுக்கு
சின்னம்மை
ஏற்படும்போது
கருவில் உள்ள
குழந்தையின்
வளர்ச்சி
பாதிக்கப்படும்.
குழந்தைக்கு
பார்வைக் குறைபாடு, தலை
சிறிதாக
இருத்தல்,
மூளை
வளர்ச்சி
குறைபாடு
போன்ற
பாதிப்புகள்
ஏற்பட
வாய்ப்புள்ளது.
சின்னம்மை
எளிதில்
பரவும்
என்பதால்
வீட்டில் உள்ள
மற்றவர்களுக்கும்
வருகிறது.
சின்னம்மை
ஒருவரது
வாழ்வில் ஒரு
முறை வந்து
விட்டால்
மீண்டும் வர
வாய்ப்பில்லை.
வாழ்நாள்
முழுவதும் இந்த
அம்மை
நோய்க்கான
தடுப்பாற்றல்
உடலில்
ஏற்பட்டு
விடும்.
சின்னம்மை
இது வரை வராத
பெரியவர்கள்
மற்றும் ஒரு
வயது
நிறைவடைந்த
குழந்தைகள்
தடுப்பூசி போட்டுக்
கொள்ளலாம்.
அறிகுறிகள்:
காய்ச்சல்
மற்றும்
கொப்புளங்கள்
இதன் அறிகுறிகளாகும்.
முதலில்
மார்பு
மற்றும்
வயிற்றுப்
பகுதியிலும், தோலின்
மேற்புறத்திலும்
ஆங்காங்கே
சிவந்தும்
அவற்றின்
மேல் ,சிறுசிறு –{ரோஜா
இதழின்மேல்
பனித்துளி
இருப்பதுபோல்
சிறுசிறு} -கொப்புளங்ககள்
ஏற்படும்
கூடவே
உடற்சோர்வும்
இருக்கும். இது
தானாக
குணமாகக்
கூடியதுதான்.
ஆனால்நோய்
தீர ஐந்து
முதல் 10 நாட்கள்வரை
ஆகலாம்.
மேலும்
இது
எளிதில்
தொற்றும்
தன்மை உள்ளது
என்பதால், முற்றிலும்
குணமடைந்து, அதன்
அறிகுறிகள்
மறையும் வரை, இந்நோய்
ஏற்பட்ட
குழந்தைகளை
வெளியில் செல்ல
அனுமதிக்கக்
கூடாது.
இது
ஒருவரிடமிருந்து
மற்றொருவருக்கு
நேரடியாகவோ, இருமும்
போதும்,
தும்மும்
போதும்
காற்றின்
மூலமாக
பரவலாம்.
சின்னம்மையின்
கொப்புள
நீரைத்
தொடுவதன்
மூலமாகவும்
இந்நோய் பரவ
வாய்ப்புண்டு.
சின்னம்மையால்
பாதிக்கப்பட்ட
நபரிடம்
அதற்கான
அறிகுறிகள்
தென்படுவதற்கு
முன்னதாகவே, முதல்
ஐந்து
நாட்களில்
மற்றவர்களுக்கு
இந்நோய்
தொற்றலாம்.
நோய்த்தொற்றுடைய
நபருடன்
தொடுதல், தொடர்பு
கொண்டால்
மட்டுமே,
நோய்
பரவும்
என்றில்லை.
நோய்
தொற்றுடைய
நபருக்கு
தாம், நோயினால்
பாதிக்கப்பட்டிருப்பது
தெரிவதற்கு
முன்னதாகவே
அதாவது
கொப்புளங்கள்
உருவாவதற்கு
முன்னதாகவே, அவரிடமிருந்து
நோய் மற்றவர்களுக்குப்
பரவத்
தொடங்கிவிடும்.
கொப்புளங்கள்
ஏற்படுவதற்கு
5
நாட்கள்
முன்பிருந்தே
அவர்களிடமிருந்து
மற்றவர்களுக்கு
நோய்த்தொற்று
ஏற்பட
வாய்ப்புண்டு.
எல்லா
கொப்புளங்களும்
பெரிதாக மாறி, காய்ந்து
உதிரும் வரை
நோய்
தொற்று
காலம்
தொடரும். இது
ஏற்பட 5
லிருந்து 10 நாட்கள்
வரை ஆகும்.
ரோஜா
இதழின் மேல்
பனித்துளி
இருப்பது போன்ற
கொப்புளங்கள்
ஏற்பட்டால்
அது
சின்னம்மைக்கு
அடையாளமாக
கொள்ளப் படுகிறது.
கொப்புளம்
பழுத்து,
உடைந்தால்
அதில்
இருக்கும்
நீர்
வெளியாகி அதன்
மேல் தோல்
மட்டும்
உடம்பில்
புண்ணாக
இருக்கும்.
வழக்கமாக
புண்ணின்
பக்கு சில
நாட்களுக்குப்
பிறகு
உதிர்ந்துவிடும்.
சில
நேரங்களில்
அது தழும்பாக
மாறலாம். இந்த
முழுமையான
சுழற்சி
முறையில் ஒரு
கொப்புளம்
ஏற்பட்டு
மறைந்தாலும்
ஒவ்வொரு
நாளும்
புதுப்புது
கொப்புளங்கள்
பல
நாட்களுக்கு
ஏற்படும். இது
சின்னம்மையின்
மற்றொரு
தனித்தன்மையாகும்.
எல்லா
கொப்புளங்களும்
பக்காக
மாறும் வரை அவர்கள்
குழந்தைகளாக
இருந்தால்,
பள்ளிக்கு
அனுப்பக்
கூடாது.
குழந்தைகளை
விட
பெரியவர்களுக்குத்தான்
இந்நோய்
அதிக
வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை
போன்றவற்றை
உண்டாக்கும்.
வெயில்
காலங்களில்
அதிகமாகவும், மழைக்காலங்களில்
ஓரளவிற்கும்
இந்நோயின் தாக்கம்
காணப்படும்.
இந்நோய்
வந்த
காலங்களிலும்
வந்த
பின்னும் நாம்
உட்கொள்ளும்
உணவைப்
பொறுத்தே
இதன் தீவிரம்
மட்டுப்படும்.
யார்
யாருக்கு
வரும்?:
எல்லா
தரப்பினருக்கும்
வரும்.
என்றாலும் 12
வயதையொட்டி
உள்ளவர்களுக்கு
எளிதில்
தொற்றிக்கொள்ளும்.
கர்ப்பிணிகள், சிறிய
வர்கள், குழந்தைகள்,
வயதானவர்கள்,
நோய்
எதிர்ப்பு
சக்தி
குறைவாக
உள்ளவர்கள் ஆகியோர்
எச்சரிக்கையுடன்
நடந்து
கொள்ள
வேண்டும்.
நோயாளிகள்
அருகில்
செல்லக்
கூடாது. முகம், கண்களுக்குள் கொப்
புளங்கள்
வந்தால்
உடனடியாக
மருத்துவரிடம்
ஆலோசனை பெறவேண்டும்.
உடலில்
எப்படி
பரவுகிறது?:
ஆரம்ப
கட்டமாக
தூய்மையற்ற
சுவாசத்தின்
சிறு துளிகளை
மூச்சுடன்
சேர்த்து
உள்ளிழுக்கும்போது, மேற்புற
சுவாசக்குழாயின்
மென் சவ்வை
வைரஸ்
பாதிக்கிறது.
தொடக்க நிலை நோய்த்தொற்று
ஆரம்பித்து 2 லிருந்து
4
நாட்களுக்குப்
பிறகு
மேற்புற
சுவாசக்குழாயின்
குறிப்பிட்ட
பகுதியில்
வைரஸ்
சார்ந்த
இனப்பெருக்கம்
நடைபெறும்.
நோய்த்தொற்று
ஏற்பட்ட
பிறகு உள்ள 4
லிருந்து 6
நாட்களில்
இரத்தத்தில்
நச்சுயிரி
பெருக ஆரம்பிக்கும்.
பிறகு
கல்லீரல், மண்ணீரல்
பகுதிகளில்
பாதிப்பை
ஏற்படுத்தும்.
உடலில்
உள்ளுறுப்புகளைத்
தாக்கும்
(குடல்,
எலும்பு
மஜ்ஜை).
அப்போது
உடல் வலியும்,
காய்ச்சலும்
ஏற்படும்.
இரண்டு மூன்று
நாட்களுக்குப்பின்
நோயின்
தாக்கம்
உடலில்
வெளிப்படையாக
தெரிய
ஆரம்பிக்கும்.
அதற்குப்
பிறகு
இரத்தத்தில்
நச்சுயிரி
மேலும்
அதிகமாகப்
பெருகும். இந்த
உயர்நிலை
இரத்த
நச்சுயிரிப்
பெருக்கம்
என்பது இரத்த
நுண் குழாய்
அகவணிக்கலங்கள்
மற்றும்
மேல்தோல்
ஆகியப்
பகுதிகளில்
தூண்டுதல்
இல்லாமல் தானாகவே
பரவும் வைரஸ்
சார்ந்த
பற்றுதல்
ஆகும்.
மல்பீசியின்படையின்
செல்களின் Varicella zoster-virus
நோய்த்தொற்று
செல்லிற்கிடையே
மற்றும் செல்லினுள்
திரவக்கோர்வையை
உண்டாக்குகிறது.
இதனால்
குறிப்பிடத்தக்க
இடங்களில்
கொப்புளங்கள்
ஏற்படுகின்றன.
ஏற்ற
உணவுமுறை :
1. காய்ச்சல்
இருக்கும்போது
வறுத்த
அரிசிக் கஞ்சி, பார்லிக்கஞ்சி
கொடுக்கலாம்.
காய்ச்சல்
குறைந்த
பின்னரே குளிர்ச்சியான
உணவுகளை
தரவேண்டும்.
2. கேழ்வரகு
மாவுடன்
அரிசி
குருணையை
கலந்து தண்ணீர்விட்டு
கூழாக
காய்ச்சி
ஆறியபின்னர்
வெங்காயம்
அரிந்து
போட்டுக் கொடுக்கலாம்.
3. ஆறின
அரிசி
சோறுடன்
மிளகு நீர்
கூட்டிச் சாப்பிடலாம்.
4. அம்மைநோய்
தீர்ந்தபின்னர்தான்
நீர் மோரும்
தயிர்சாதமும்
அளிக்கவேண்டும்.
5. காரம்
கூடவே கூடாது.
மென்பானங்கள்
வேண்டாம்.
6. எலுமிச்சை, நெல்லிக்காய், பனங்கற்கண்டு, கறிவேப்பிலை, பச்சைப்பயறு,
காராமணி, அத்திப்பழம், சீனி
கற்கண்டு
ஆகியவற்றை
அளவோடு
கொடுக்கலாம்.
7. இளநீர், நுங்கு, தர்பூசணிப்
பழம் நல்லது.
8. திட
உணவைக்
குறைத்து, திரவ உணவை
அதிகம்
உட்கொள்வது
சிறந்தது. பழங்கள்
நிறைய
சாப்பிடலாம்.
9.
பாரசிட்டமால்
(உடல்
வெப்பநிலை
குறைக்க உதவும்
மருந்து)
(அசிடமினோஃபென்)
காய்ச்சலைக்
குறைப்பதற்குப்
பெரும்பாலும்
பயன்படுத்தப்படுகிறது.
ஆகாதவை:
1.வலி நீக்க
மருந்து
(ஆஸ்பிரின்)
அல்லது ஆஸ்பிரின்
இருக்கும்
மற்ற
பொருட்களை
சின்னம்மை நோய்
இருக்கும்
குழந்தைகளுக்கு
(அல்லது வைரஸினால்
ஏற்பட்டிருக்கலாம்
என்று சந்தேகிக்கக்கூடிய
உடல்நலக்
குறைவை
ஏற்படுத்தும்
காய்ச்சல்
எதுவாக இருந்தாலும்)
கொடுக்கப்படல்
கூடாது.
ஏனென்றால் இது
கடுமையான
மற்றும்
உயிர்
சேதத்தை
விளைவிக்கக்கூடிய
ரெயேவின்
நோய்
குறித்தொகுப்பு
ஆபத்தை
ஏற்படுத்தலாம்.
2.தேங்காய் ,
மாங்காய், நல்லெண்ணெய்
, இலுப்ப
எண்ணெய்,
சோற்று
ஆவி , நெல்ஆவி,கறிகள்
அவித்த வாடை ,பாலுறவு
கூடவே கூடாது .
தடுப்பு
மருந்து:
1974ம்
ஆண்டில் ஓகா
ஸ்டெரியினிலிருந்து
நீர்க்கோளவான்
சின்னம்மை
தடுப்பு
மருந்து முதன்
முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால்
உருவாக்கப்பட்டது.
1995ம்
ஆண்டிலிருந்து
தொற்றுநோய்
தடுப்பூசி
மருந்தாக
அமெரிக்காவில்
கிடைக்கப்பெற்றது.
இந்த மருந்து
இங்கும்
உபயோகப்
படுத்தப்படுகிறது.
இந்த
மருந்தூசி
வாழ்நாள்
முழுவதும்
பாதுகாப்பு
அளிக்காது
என்பதால், ஆரம்ப கால
தடுப்புமருந்து
அளிக்கப்பட்டதுடன்
நில்லாமல், ஐந்து
வருடங்களுக்குப்
பின்னர்
மீண்டும்
தடுப்பு
மருந்து
அளித்தல்
அவசியம்.
====================================================
தட்டம்மை
குழந்தைகளை
பெரிதும்
தாக்கும்
இந்நோய் வைரஸ்
கிருமியால்
ஏற்படுகிறது.
அறிகுறிகள்
தட்டம்மை
விரைவாகப்
பரவும் ஒரு
சுவாச நோய்த்தொற்று.
ப்ளு
போன்ற
அறிகுறிகள் -
காய்ச்சல், இருமல், நீர்
நிறைந்த
சிவந்த
கண்கள்
மற்றும்
ஜலதோஷம்
போன்றவையும்
ஏற்படும்.
நீலம்-வெள்ளை
நிற மையப்
பகுதி
கொண்ட
சிறிய
சிவப்பு நிற
புள்ளிகள்
போன்ற
தோற்றம்
வாயினுள்
ஏற்படும்.
உடல்
முழுவதும்
தோலில்
வியர்க்குரு
போன்று
பரவும்.
கண்களிலும்
இது
காணப்படும்.
கண்கள்
உறுத்தும்.
கண் எரிச்சல், உடல் எரிச்சல்
உண்டாகும்.
பரவும்
முறை
விரைவாக
பரவக்கூடிய
இவ்வகை
தட்டமை வைரஸ்
இருமல்,
தும்மல், நோய்வாய்ப்பட்ட
நபருடன்
நெருங்கிய
தொடர்புகொள்ளும்
போது,
நோய்வாய்ப்பட்ட
நபரின்
மூக்கில்
அல்லது
தொண்டையில்
வடியும் திரவம்
நம்மேல்
படும்போதும்
பரவுகிறது.
இவ்வகை
வைரஸ் காற்று
மற்றும்
தொற்று கண்ட பகுதியில்
2
மணிநேரம் வரை
வீரியத்துடன்
காணப்படும்.
இந்நோய்
தொற்று கண்ட
நபர் உடலில்
தொற்று
ஏற்படுவதற்கு
நான்கு
தினங்களுக்கு
முன்பாகவும், மற்றும்
தொற்று
ஏற்பட்ட பின்
நான்கு
தினங்களுக்கும்
அந்நபரிலிருந்து
நோய்
பரப்பப்படுகிறது.
புட்டாளம்மை
குழந்தைகளுக்கு
ஏற்படும்
அம்மைகளில்
இதுவும்
ஒன்றாகும்.
உமிழ்நீர்
சுரப்பிகளில்
ஒன்றாகிய
பேரோடிட்
சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற
நோயாகும்.
காதின்
கீழ்ப்
பகுதியில்
வீக்கம்
ஏற்படும்.
ஆரம்பத்தில் 101f வரை
சுரம்
இருக்கும்.
வாயைத்
திறக்க
முடியாமல்
வலி இருக்கும்.
உணவு, தண்ணீர்
உட்கொள்ளும்போது
வலி
இருக்கும்.
இந்த நோய்க்கு
பொன்னுக்கு
வீங்கி என்ற
வேறு
பெயரும்
வழக்கில்
உண்டு.
வேப்பங்
கொழுந்தையும், மஞ்சளையும்
சரிசமமாக
எடுத்து
அரைத்து வெளிப்பூசுதல்
சிறந்த
பலனைத் தரும்.
உமியம்மை
குழந்தைகளை
பெரும்பாலும்
தாக்கும்
இந்த அம்மை
நோய்
ரூபெல்லா
என்ற வைரஸ்
கிருமியால்
ஏற்படுகிறது.
இந்த
நோயின்
முக்கிய
அறிகுறி
காய்ச்சல் (101- 102).
வாந்தியும்
பேதியும்
சில
நேரங்களில்
உண்டாகும்.
மூன்றாம்
நாள்
முகத்தில்
சிறு
நமைச்சல்
இருக்கும்.
பிறகு
உடலெங்கும்
உமியைப்
போல்
கொப்புளங்கள்
வர
ஆரம்பிக்கும்.
ஐந்தாம் நாள்
நீர்க்கோர்த்த
கொப்புளங்களாக
மாறும். பின்
சிறிது
சிறிதாக
ஒன்பதாவது
நாளில்
மறைந்துவிடும்.
பொதுவாக
அம்மை நோய்
தாக்கினால்
கடைப்பிடிக்க
வேண்டியவை
அம்மை
நோய்க்கான
அறிகுறிகள்
தென்பட
ஆரம்பித்தவுடன்
உடனடியாக
மருத்துவரை
அணுகி
ஆலோசனை பெற
வேண்டும்.
மருத்துவரின்
ஆலோசனையின்
படி மட்டுமே
மருந்துகள்
கொடுக்கப்பட
வேண்டும்.
அம்மை நோயால்
சில சமயம், வாந்தி
வயிற்றுப்போக்கு
ஆகியவை
ஏற்படலாம்.
அவற்றை தக்க
முறையில்
மருந்து
கொடுத்து
சரிபடுத்த
மருத்துவரை
அணுகுவதே
சிறந்தது.
நோய்
மற்றவர்களுக்கு
பரவாமல்
தடுக்க நோய்வாய்ப்பட்ட
நபரை தனி
படுக்கையில்
படுக்க
வைக்க
வேண்டும்.
அவருடைய உபயோகப்
பொருட்களை
மற்றவர்கள்
உபயோகப்படுத்தக்
கூடாது.
காய்ச்சி
வடிகட்டிய
தண்ணீரையே
அருந்த
வேண்டும்.
திட உணவை
குறைத்து
திரவ உணவு
உட்கொள்வது
சிறந்தது.
இளநீர்
உபயோகிக்கலாம்.
கொப்புளங்கள்
அனைத்தும்
காய்ந்தபின்
குளிப்பாட்ட
வேண்டும்.
அதுவரை
குழந்தைகளை
பள்ளிக்கு
அனுப்பாமல்
வீட்டில்
ஓய்வெடுக்க
விட வேண்டும்.
பெரியவர்களுக்கும்
இது
பொருந்தும்.
தடுப்பு
ஊசி
MMR என்ற
நோய்
தடுப்பு
மருந்து
(ஙச்ஞிஞிடிணஞு)
குழந்தை
பிறந்த 9வது
மாதத்தில்
இருந்து 12
மாதங்களுக்கு
உள்ளாக
போடப்பட
வேண்டும். இது
மூன்று
வகையான
அம்மை
நோயைத்
தடுக்கும்
ஆற்றல் கொண்டது.
சித்த
மருத்துவத்தின்
பங்கு
நோய்
வரும்முன்
காப்பது
சிறந்தது.
கோடை வெயில் சுட்டெரிக்க
ஆரம்பிக்கும்போதே
குழந்தைகளுக்கு
மாதம் ஒரு
முறை 10
கிராம்
வேப்பங்கொழுந்தும்
10
கிராம் விரலி
மஞ்சளும்
சிறிது
உப்பும் சேர்த்து
அரைத்து
சிறு
உருண்டைகளாக
உருட்டி
சாப்பிடக்
கொடுக்க
வேண்டும்.
இதன்மூலம்
நோய்
எதிர்ப்பு
சக்தி உடலில்
வலுப்பெற்று இந்நோய்கள்
தாக்காமல்
பாதுகாத்துக்
கொள்ளலாம்.
உடல்
சூட்டைக் குறைக்க
இளநீர்,
நுங்கு, உடலுக்கு
குளிர்ச்சியை
உண்டாக்கும்
உணவுகளை
உண்டு வரவேண்டும்.
மருந்து
சிவப்பு
சந்தனம்,
வெள்ளைச்
சந்தனம்,
மஞ்சள், இவற்றை சம
அளவு எடுத்து
தண்ணீர்
விட்டு
அரைத்து,
நன்றாக
குழைத்து
லேசாக
சூடாக்கி
ஆறவைத்து
கொப்புளங்கள்
மேல் தடவி
வரவும்.
அல்லது,
கொதிக்க
வைக்காமலும்
அரைத்து
பூசலாம்.
இதனால்
அம்மையின்
வேகம்
குறைந்து கொப்புளங்கள்
விரைவில் ஆறி,
அம்மை
வடுக்கள்
மறையும்.
சிவப்புச்
சந்தனத்தை
அரைத்து ஆறிய
புண்கள் மீது
தடவி வந்தால் அம்மைத்
தழும்புகள்
விரைவில்
மறையும்.
மஞ்சள், வேப்பிலையை
அரைத்து
குழம்பாக்கி
லேசாக சூடேற்றி
கொப்புளங்கள்
மேல்
தடவி
வந்தால்
அம்மை
நோயின்
வேகம் குறைந்து, விரைவில்
குணமாகும்.
அம்மை
நோய்
கண்டவர்கள்
மருத்துவரிடம்
காண்பித்து
நோயின்
தன்மையை
அறிந்து
உள்ளுக்கு
மருந்து
சாப்பிட
வேண்டும்.
==========================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக