17/1/17

அலங்காநல்லூரில் போராட்டம்

சனவரி 16 
சனவரி 16, திங்கட்கிழமையன்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது.
சனவரி 17
சனவரி 17, செவ்வாயன்று அதிகாலையில் 200 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதிவாழ் மக்களும், அண்டை ஊர் மக்களும் போராட்டத்தில் இணைந்தனர். இதனையடுத்து கைதானவர்களை காவல்துறை விடுதலை செய்தபோதிலும், சுமார் 100 பேர் அங்கிருந்து அகல மறுத்தனர்.[10] மதுரை நகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடக்கும் பகுதிக்கு வந்தவண்ணம் இருந்தனர். போராட்டம் நடத்துவோருக்கு குடிநீரும், உணவுப் பொருட்களையும் அந்த மக்கள் வழங்கினர்.

கருத்துகள் இல்லை: